ஓட்டை பஸ்களை ஓட்டாதீர்: போக்குவரத்து அமைச்சர் உத்தரவு
சென்னை:
பழுதடைந்த, அபாயகரமான பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகநிர்வாக இயக்குநர்களை போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் மன்னார்குடியில், பேருந்தில் பயணம் செய்த 3 வயது சிறுமி, பேருந்தில் இருந்த துளை வழியாக கீழேவிழுந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடும் அதிர்ச்சி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, பழுதடைந்தபேருந்துகளை உடனடியாக சரி பார்க்குமாறு உத்தரவிட்டார். மேலும் 6 போக்குவரத்துக் கழக அதிகாரிகளையும்தற்காலிக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களின் கூட்டம் சென்னையில்நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் விஸ்வாதன் பேசுகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை மட்டுமே இயக்குங்கள். பழுதடைந்த பேருந்துகளை உடனடியாகபயன்பாட்டிலிருந்து நிறுத்தி விடுங்கள். முறையாக சரி செய்யப்பட்ட பின்னரே அந்த பேருந்துகளை மீண்டும்உபயோகப்படுத்த வேண்டும்.
புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக முதல்வர் தெரிவித்துள்ள உத்தரவுகளின்படி நடந்து கொள்ளவேண்டும் என்றார் அமைச்சர் விஸ்வநாதன்.