புதுவையில் லாட்டரிக்கு தடை: அரசு உத்தரவு செல்லும்-உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் லாட்டரி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லும் என்றுசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்குள், பிற மாநில லாட்டரிச் சீட்டுக்களை அச்சடிப்பது, விற்பனை செய்வது,குலுக்கல் நடத்துவது ஆகியவற்றிற்கு கடந்த 1998ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அம் மாநில அரசு தடை விதித்தது.

இதை எதிர்த்து புருஷோத்தமன், ராஜாராம் ஆகிய இரண்டு லாட்டரி ஏஜென்டுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தனர். தங்களது ரிட் மனுவில், 1998ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி அரசு நடந்துகொள்ளவில்லை. மேலும்,லாட்டரிச் சீட்டு விற்பனை மீதான விற்பனை வரியை அதிகப்படுத்தியது.

அரசு பிறப்பித்த உத்தரவை அரசே அமல்படுத்தாத நிலையில் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம்ஏஜென்சிகளுக்கு இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இருவரது ரிட் மனுக்களையும் டிஸ்மிஸ் செய்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், விற்பனை வரியை அதிகப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு உத்தரவு செல்லாது என்று கூறவேண்டும் எனக் கோருவதை ஏற்க இயலாது.

லாட்டரி விற்பனைக்கு தடை நீடிக்கும் வரை மனுதாரர்கள் இது போன்ற கோரிக்கைகளை வைக்கவும் முடியாது,லாட்டரிச் சீட்டுக்களை விற்பனை செய்யவும் முடியாது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+