எம்ஜிஆர். நினைவு தினம்: ஜெ. அஞ்சலி
சென்னை:
முன்னாள் முதல்வரும்,அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்றுஅனுசரிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைந்தார். அவரது 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம்முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர். நினைவிடத்தில்முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், ஜெயக்குமார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர்இதில் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் பொன்னையன் தலைமையில், தமிழகத்தை முதல் மாநிலமாக்கஎம்ஜிஆர் வழியில் தொடர்ந்து பாடுபடுவோம் என்று ஜெயலலிதா உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், எம்ஜிஆர் கழகப் பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன், மக்கள் தமிழ் தேசம்கட்சித் தலைவர் கண்ணப்பன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுகவினர் ஏற்பாடுசெய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications