நீதிபதி திடீர் இடமாற்றம்: நெடுமாறன் விடுதலையாவதில் புதிய சிக்கல்!
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஜாமீனில் விடுதலை ஆவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.அவரது ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளிக்க இருந்த நீதிபதி திடீரென மாற்றப்பட்டுவிட்டார்.
விடுதலைப் புலிகளை ஆதத்துப் பேசியதாக கூறி நெடுமாறன் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. கடந்த 15 மாதமாக அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், பொடா வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால்திண்டுக்கல் மற்றும் ஆலந்தூர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நெடுமாறன்விடுவிக்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இரு நீதிமன்றங்களிலும் ஜாமீன் கோரி நெடுமாறன் சார்பில் மனுக்கள் தாக்கலாயின.
இதில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்றுவிசாரணை முடிவடைந்தது. இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ஆனந்தன் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை நெடுமாறனின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆனால் நீதிபதி ஆனந்தன் வரவில்லை.
நீதிபதி ஆனந்தன், கூடுதல் மாஜிஸ்திரேட்டாக 48 நாள் பயிற்சியில் வந்தவர் என்றும் ஆனால் பயிற்சிக் காலம்முடிவடைவதற்குள் அவர் இன்று இடம் மாற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இந்த ஜாமீன் தொடர்பாக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தையே மீண்டும் அணுகுமாறும் நெடுமாறன்தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் நெடுமாறன் சிறையிலிருந்து வெளியே வருவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொடாநீதிமன்றத்தில் நெடுமாறனின் ஜாமீன் மனு நிராகக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் புதிதாக அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டுமா அல்லது பழைய மனுவின் அடிப்படையில்மீண்டும் விசாரணை நடக்குமா என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.