கஞ்சா வழக்கில் ஜனனி மீது குற்றச்சாட்டு பதிவு
மதுரை:
கஞ்சா வழக்கில் ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீது மதுரை போதைப் பொருள்தடுப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தியதாகக் கூறி ஜனனி, அவரது தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர்கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனனி தாக்கல் செய்தமனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், விசாரணைக்குத் தடை விதித்துள்ளது. இருப்பினும் குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்யலாம் என்று அது கூறியுள்ளது.
இந் நிலையில் இன்று காலை ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது நீதிபதி சம்பத்குமார், 3 பேர் மீதும் குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களாக அவர் கூறியபோது, ஜனனியும், ரமீஜாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.இது பொய் வழக்கு என்று அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது












Click it and Unblock the Notifications