ஹேப்பி நியூ இயர்: தலைவர்கள் வாழ்த்து!
சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்குபுத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராம் மோகன் ராவ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் வாழ்வில்மகிழ்ச்சியும், வளமும் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், வரும் புத்தாண்டு சாதனைப் பூக்கள் பூக்கிறபொற்காலமாக மலரட்டும் என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள செய்தியில், ஒளிமிகுந்த நல்வாழ்வை பெற்றுத் தர இந்தப் புத்தாண்டுவழிகோலட்டும். சகோதரத்துவம் உலகில் பரவட்டும், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஆண்டாகஇருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
இவர்கள் தவிர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.