மேட்டூர் அணை காலியாகிறது: விவசாயிகள் கவலை
சேலம்:
மேட்டூர் அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்கவலையில் மூழ்கியுள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் தற்போது சம்பா பயிர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய மழை மற்றும் காவிரி நீர் கிடைக்காததால், விவசாயிகள் பெரும்துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
விவசாயிகளின் தொடர் கோரிக்கையையடுத்து தற்போது மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால்அணையில் நீர் இருப்பு வேகமாக குறையத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி அணையில் 42 அடி நீர் மட்டுமே உள்ளது. அதாவது 13 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது.குறைந்தபட்ச தண்ணீர் 6 டிஎம்சி போக, மீதமுள்ள தண்ணீரை வைத்து இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமேபாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். தொடர்ந்து தண்ணீர் கிடைக்க தமிழக அரசு உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications