ஜெ. சொத்து குவிப்பு வழக்கு-: சிறப்பு நீதிபதியை நியமித்தது கர்நாடகம்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதிபதியாக பச்சபுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்கான ஏற்பாடுகளை கடந்த டிசம்பர் 27ம் தேதிக்குள் செய்து முடிக்குமாறு காலக்கெடுவும் விதித்திருந்தது.
சிறப்பு நீதிமன்றத்திற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் குழம்பித் தவித்த கர்நாடக அரசு, இறுதியில் சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்க முடிவு செய்தது.
இதற்கிடையே வழக்கு விசாரணையை பாண்டிச்சேரிக்கு மாற்றக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந் நிலையில், சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி பதிவாளர் பச்சபுரியை கர்நாடக அரசு நியமித்துள்ளது.












Click it and Unblock the Notifications