பவானி ஆற்றில் மூழ்கி 3 ஐயப்ப பக்தர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆற்றில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 3 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சிலர் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு, வேன் மூலம் சபரிமலைக்குபயணித்தனர். செல்லும் வழியில் இன்று காலை அவர்கள் பவானிக்கு வந்தனர்.
பவானி கூடுதுறை என்ற இடத்தில் ஆற்றில் இறங்கிக் குளித்தனர். அப்போது ராஜா, சீனிவாசன் மற்றும் பாலாஜிஆகிய 3 பேரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்க மற்றவர்கள் முயன்றும்வெள்ளம் அதிகமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை.
3 பேரின் உடல்களும் பின்னர் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மூன்று பேரும் சென்னைஅம்பத்தூர் தொழிற்பேட்டையில் வெல்டிங் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.












Click it and Unblock the Notifications