ராணுவத்தில் இணைந்தது பீஷ்மா !
சென்னை:
சென்னை ஆவடி டாங்குகள் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அதி நவீன டி-90 ரக பீஷ்மா என்றடாங்குகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.
ரஷிய பாகங்களைக் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்படும் இந்த டி-90 ரக டாங்குகளை ஆவடியில் உள்ளகனரக வாகன நிறுவனம் தயாரித்து வந்தது. இந்தப் பணி முடிவடைந்த நிலையில் இந்த அதி நவீன டாங்குகளைராணுவத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது
மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் முதல் பீஷ்மா டாங்கைப் பெற்றுக் கொண்டார்.பின்னர் அதன் சாவி, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் என்.சி.விஜ்ஜிடம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது ராஜகோபால் பேசுகையில், ரஷிய உதவியுடன் தயாரிக்கப்படும் பீஷ்மா டாங்குகள், இன்னும்சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே முற்றிலும் சுயமாக தயாக்கப்படும் நிலை ஏற்படும். தற்போது80 பீஷ்மா ரகடாங்குகள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவே வடிவமைத்துள்ள மேம்படுத்தப்பட்ட, நவீன அர்ஜூன் ரக டாங்குகளின் தயாரிப்புப் பணியும்விரைவில் ஆவடி தொழிற்சாலையில் தொடங்கும். இன்னும் சில மாதங்களில் அர்ஜூனா டாங்குகள்தயாராகிவிடும் என்றார்.
ஜென்ரல் விஜ்கூறுகையில், பீஷ்மா டாங்குகள் மூலம் இந்தியாவின் பலம் கூடுதலாகியுள்ளது. எதிரிகளின்இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்குவதில் மிகச் சிறந்தது பீஷ்மா. இந்திய ராணுவத்தில் பீஷ்மா டாங்கும்,அர்ஜூனா டாங்கும் மிக முக்கிய பங்கு வகிக்கும். உலகின் மிகச் சிறந்த டாங்குகள் வரிசையில் இவை இரண்டும்முன்னணியில் உள்ளன.
டி-90 ரக பீஷ்மா டாங்குகளில் காணப்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சரி செய்யப்பட்டு விட்டனஎன்றார்.
ஒரு பீஷ்மா டாங்கின் விலை ரூ 11 கோடியாகும்.












Click it and Unblock the Notifications