ராமேஸ்வரம் வந்த இலங்கைத் தமிழ் குடும்பம் கைது
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக ராமேஸ்வரம் வந்த 4 இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன், அவரது மனைவி ஜெனினா குரு, மகன் அருண்ராஜ், மகள்லாரன்ஸியா ஆகியோர் ஒரு மீனவடரிம் ரூ. 2,500 கொடுத்து படகு மூலம் ராமேஸ்வரம் வந்தனர்.
ஆனால், அந்த மீனவர் ராமேஸ்வரம் அருகில் உள்ள ஒரு தீவில் இவர்களை விட்டு விட்டுச் சென்று விட்டார். தீவில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர்களை அந்தப் பக்கமாக வந்த ஒரு படகுக்காரர் மீட்டு தனது படகில் அழைத்து வந்தார்.
தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் 4 அகதிகளையும் மீட்டனர்.
போலீஸாரிடம் செபாஸ்டியன் கூறுகையில், தனது மகள் லாரன்ஸியாவுக்கு தொண்டையில் கட்டி உள்ளதாகவும், அவர் பேசமுடியாமல் சிரமப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை எடுக்கவே இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.
விமான பயணத்திற்குரிய வசதி தங்களிடம் இல்லாததால் இவ்வாறு படகு மூலம் திருட்டுத்தனமாக வந்ததாக தெரிவித்தார்செபாஸ்டியன். நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செபாஸ்டியன் சொல்வது உண்மையாக இருந்தால் சிகிச்சை மேற்கொள்ள உரிய அனுமதி பெற்றுத் தர முயற்சிக்கப்படும் எனபோலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications