For Daily Alerts
Just In
தீக்குளிப்பு "டிராமா": 4 அதிமுக பிரமுகர்கள் கைது
கோவை:
தீக்குளித்துத் தற்கொலை செய்யப் போவதாகக் கூறி மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு, பற்ற வைக்காமல் போக்குக்காட்டி பதற்றத்தை ஏற்படுத்திய 4 அதிமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த கோவை பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் செல்வராஜ், அன்பு சந்திரன்,மகேந்திரன், லோகநாதன் ஆகியோர், கோவை அதிமுக அலுவகமான இதயதெய்வம் மாளிகை முன்பு கூடி தங்களது உடலில்மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டனர்.
எங்களை கூட்டத்திற்கு அழைக்காவிட்டால் தீக்குளித்து விடுவோம் என்று அவர்கள் கோஷமிட்டனர். கையில் தீப்பெட்டியைவைத்துக் கொண்டு தீக்குளிக்கப் போகிறோம், தீக்குளிக்கப் போகிறோம் என்று நான்கு பேரும் சாலையில் நின்று சப்தம்போட்டதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து 4 பேரையும் கைதுசெய்தனர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Sunday, January 11, 2004, 5:30 [IST]