பவானிசாகர் அணை நீர் பிரச்சனை: மறியலில் ஈடுபட்ட 6,000 விவசாயிகள் கைது
ஈரோடு:
பவானிசாகர் அணை நீரை ஈரோடு மாவட்டக் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்என்ற கோரிக்கையுடன் மறியலில் ஈடுபட முயன்ற 2,000 பெண்கள் உட்பட 6,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மறியலில் விவசாயிகளுக்கு ஆதரவாக பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ. சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியசாமி, பாலசுப்ரமணியம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அணை நீர் முழுவதையும் ஈரோடு மாவட்டத்திற்கேபயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரியிருந்தனர். அரசு இதற்கு பதிலளிக்காததால் விவசாயிகள்மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் ஊர்வலமாகப் புறப்பட்டபோது, நடுவழியில்போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மறியல் நடந்தது மொத்தம் 10 நிமிடம்தான். ஆனால்,6,000 விவசாயிகளையும் கைது செய்ய 2 மணி நேரம் ஆனது.












Click it and Unblock the Notifications