சென்னை: குடிநீர் லாரி மோதி கொரிய மாணவர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செனனை தண்ணீர் லாரி எமனுக்கு கொரியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் இன்று பலியானார்.

சென்னை நகரில் குடிநீர் வினியோக்கிக்கும் லாரிகளில் பெரும்பாலனவை சாலையில் ஓடுவதற்கே தரம்இல்லாதவையாக உள்ளன. ஆர்.டி.ஓ., பிரேக் இன்ஸ்பெக்டர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு தனியார்காண்ட்ராக்டர்கள் இந்த லாரிகளை தெருக்களில் இறக்கிவிட்டுள்ளனர்.

இவை சராசரியாக நாளுக்கு ஒரு அப்பாவியை கொன்று வருகின்றன. இந்த லாரிகளுக்கு இரு சக்கரவாகனங்களில் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் பலியாகி வருகின்றனர்.

அதிகமாக டிரிப் அடித்தால் அதிக லாபம் என்பதால், சரியாகக் கூட தூங்காமல், குடித்துவிட்டு, கையில் பீடியுடன்,படிப்பறிவில்லாத டிரைவர்கள் படு வேகத்தில் லாரியை செலுத்தி அப்பாவிகளைக் கொன்று வருகின்றனர்.

இதுவரை நம் ஆட்களை மட்டுமே கொன்று வந்த இந்த லாரி டிரைவர்களின் அடாவடி டிரைவிங்குக்கு இன்றுகொரிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பலியானார்.

தென் கொரியாவைச் சேர்ந்த சாங் சங் ஹோ (26) என்ற மாணவர், லயோலா கல்லூரியில் 3 மாத ஆங்கிலப் பயிற்சிவகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் கோடம்பாக்கம் யுனைட்டட் இந்தியா காலனிஅருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே படுவேகத்தில் வந்த தண்ணீர் லாரி மோதி கீழே தள்ளி, அவர் மீது ஏறிஇறங்கியது.

இதில் அந்த இளைஞர் அந்த இடத்திலேயே பலியானார். அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்துஓடிவிட்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+