தமிழர் நலன் காக்க அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
அதிமுகவை தோற்கடிக்கவே திமுக கூட்டணியில் இணைவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட முடிவெடுத்த பின் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகம் இன்று ஒரு சரித்திர திருப்புமுனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழன் மற்றும் தமிழகத்தின்சுயமரியாதையை பின் தள்ள முயற்சி நடக்கிறது. தமிழ், தமிழர்கள் என்ற உணர்வையே மழுங்கடிக்கவும் திராவிடசிந்தனைகளை கூர் மழுங்கச் செய்யவும் முயற்சி நடக்கிறது.
இது தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாகவே நான் நினைக்கிறேன். தமிழர்களின் நலன் காக்க,தமிழ்நாட்டின் மானம் காக்க அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அதற்கு ஏதுவாக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் சேரமுடிவு செய்திருக்கிறோம்.
ஆனால், பழசை எல்லாம் துரதிஷ்டவசமாக பா.ஜ.க. மறந்துவிட்டு அதிமுகவுடனான உறவை புதுப்பிக்க முயல்கிறது.தமிழக மக்களின் விருப்பத்துக்கும், எதிர்பார்ப்புக்கும் எதிரான முடிவை பா.ஜ.க. எடுத்துள்ளது. அதிமுகவுடன்கூட்டணி சேரும் பா.ஜ.கவின் முடிவு எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
இதனால் மத்திய அரசுக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications