ஜாமீன் மனு தாக்கல் செய்தார் வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா வழக்கில் ஜாமீன் கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மனுதாக்கல் செய்தார்.
இதன் மீது வரும் 21ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, கடந்த 18 மாதங்களாக வைகோவுடன்சிறையில் இருந்த மதிமுக நிர்வாகிகள் 8 பேருக்கும் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்துஇன்று வைகோ சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை நடக்கும்போது வழக்கறிஞரை வைத்துக் கொள்ளாமல், தானே நேரடியாக வாதாடவைகோ முடிவு செய்துளளார்.












Click it and Unblock the Notifications