சிறையிலிருந்து 8 மதிமுகவினரும் விடுதலை

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

பொடா வழக்கில் வைகோவுடன் கைதாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற, 8 மதிமுக நிர்வாகிகளும்வேலூர் சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக, மதிமுக பொதுச் செயலாளர்வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் பொடா சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் வைகோ தவிர, ஏனைய 8 பேரும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில்தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்தமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதன்படி, கணேசன், அழகுசுந்தரம், கணேசமூர்த்தி, நாகராஜன், மணியன், இளவரசன், பூமிநாதன் மற்றும்சிவந்தியப்பன் ஆகியோர் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைமுன்னாள் மத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் உள்ளிட்ட மதிமுகவினர் வரவேற்றனர்.

வைகோவை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்:

இந் நிலையில், சிறையில் உள்ள வைகோவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன்மற்றும் ரங்கராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

வைகோ பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு இம் மாதம் 21ம் தேதி விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+