ஸ்பிக் ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்திடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள், அந்த நிறுவனத்துக்கே கடந்த அதிமுகஅரசால் விற்கப்பட்டன. இதன்மூலம் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமி செட்டியாரே ஸ்பிக் நிறுவன தலைவரானார்.

அரசின் வசம் இருந்த பங்குகளை ஸ்பிக்குக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால், தமிழக அரசுக்கு ரூ.28.29 கோடி இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதா, முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன்,ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ராஜமாணிக்கம் இதை விசாரித்து வந்தார்.

ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து தனி நீதிமன்றம்வழக்கை விசாரிக்கலாம், ஆனால் வழக்கில் வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்தத் தடை சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தீர்ப்பு நாளை வழங்கப்படும் என இன்று நீதிபதி அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+