பலியானவர்களின் வாரிசுக்கு அரசு வேலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவழங்கப்படும் என தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் அண்ணாவி கூறியுள்ளார். பலியானவர்களின்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவந்தபோது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில்,
ஏராளமான உயிர்களைப் பலி கொண்ட இந்த விபத்து குறித்து அறிந்ததும் அதிக துயர் அடைந்தேன்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications