வைகோவின் ஜாமீன் மனு மீது பிப்-3ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாமீன் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவின் மீது வரும் பிப்ரவரி 3ம் தேதிதீர்ப்பு வழங்கப்படும் என பொடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று காலை நடப்பதாக இருந்த, வைகோவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, நீதிமன்றம்பிற்பகலுக்குத் தள்ளி வைத்ததால் கோபமடைந்த வைகோவின் வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்புசெய்து நீதிமனறப் புறக்கணிப்பு செய்தனர்.

இதனால் வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு விசாரணை பாதியிலேயே நின்று போனது.

ஜாமீன் கோரி வைகோ தாக்கல் செய்த மனு மீது கடந்த 21ம் தேதி விசாரணை நடந்தது. அப்போது வைகோதனக்காக தானே வாதாடினார். இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரனே நேரில் வந்து வாதாடுவார் என அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறினார். இதையடுத்து வழக்குவிசாரணையை 22ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன் ஒத்தி வைத்தார்.

ஆனால், சந்திரனுக்கு வேறு பணிகள் இருப்பதால் அவரால் 27ம் தேதிதான் வர முடியும் என ஜெயக்குமார்கூறினார். இதையடுத்து வழக்கை இன்றைக்கு (27ம் தேதி) நீதிபதி ஒத்தி வைத்தார்.

வைகோவுக்கு எளிதில் ஜாமீன் கிடைத்துவிடக் கூடாது என்பற்காக, இழுத்தடிப்பு செய்யவே 27ம் தேதி வரைநீதிமன்றத்தில் ஆஜராகாமல் சந்திரன் தவிர்ப்பதாக மதிமுக வழக்கறிஞர்கள் அன்றே குற்றம் சாட்டினர்.

இந் நிலையில் வைகோவின் ஜாமீன் மனு மீது இன்று காலை விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். இதற்காகவேலூர் சிறையில் இருந்து வைகோவும் அழைத்து வரப்பட்டிருந்தார். ஆனால், அரசின் தலைமை வழக்கறிஞர்சந்திரன் நீதிமன்றத்துக்கு வரவில்லை.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறுகையில், என்.ஆர். சந்திரன் உயர் நீதிமன்றத்தில் வேறுவழக்கில் ஆஜராக சென்றுள்ளதால் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

மேலும் அதுவரை வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் சாட்சிகளை விசாரித்துக்கொண்டிருக்கலாம் என்றார். இதை நீதிபதியும் ஏற்றுக் கொண்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கு மதிமுக வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேம் தெரிவித்தனர். கோபமடைந்த அவர்கள் ஒட்டுமொத்தமாகநீதிமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். வெளியே அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

வெளியே நிருபர்களிடம் பேசிய வைகோவின் வழக்கறிஞர் தேவதாஸ், அரசு தலைமை வழக்கறிஞர் வைகோஜாமீன் மனு மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார் என்றார்.

மதிமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்ததால், சாட்சிகளை விசாரிக்க முடியாத சூழல் உருவானது.இதையடுத்துப் பேசிய நீதிபதி ராஜேந்திரன், வைகோ தரப்பு வழக்கறிஞர்களின் செயலால் நீதிமன்றத்தின்பணிகளை பாதித்துவிட்டது என்றார்.

அப்போது பேசிய வைகோ, அரசுத் தரப்பில் வேண்டுமென்றே செய்யப்படுகிற தாமதங்களைக் கண்டித்தே எனதுவழக்கறிஞர்கள் வெளியேறியுள்ளனர். அவர்களது வெளிநடப்புக்காண காரணத்தை என்னால் உணர முடிகிறதுஎன்றார்.

இதையடுத்து நீதிபதி கூறுகையில், நீதிமன்றத்தின் மரபுகளை நாம் கடைபிடித்து தானே ஆக வேண்டும். உங்கள்(வைகோ) வழக்கறிஞர்கள் வெளிநடப்பு செய்துள்ள நிலையில் நீங்கள் தொடர்ந்து நீதிமன்றத்திலேயேஅமர்ந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றார்.

ஜாமீன் மனு மீதான விசாரணையும், சாட்சிகள் விசாரணையும் பிற்பகலில் நடக்கும் என்றும் அறிவித்தார்.

இந் நிலையில் பிற்பகலில் என்.ஆர். சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகி வைகோவுக்கு ஜாமீன் தரக் கூடாது என்றுவாதாடினார்.

இதையடுத்து இந்த மனு மீது வரும் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ராஜேந்திரன் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+