மதுரை உயர் நீதிமன்ற கிளையின் அதிகாரம்: சென்னை வழக்கறிஞர்கள் முட்டுக்கட்டை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல் செயல்படவுள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு, ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை உலகனேரியில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி முதல்செயல்படத் தொடங்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், தமிழக, பாண்டிச்சேரி பார் கவுன்சில்தலைவருமான பிரபாகரன் கூறுகையில், மதுரையில் அமைந்துள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களைவிசாரிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கக் கூடாது.

அதேபோல, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு குறைந்தபட்ச மாவட்டங்களையே ஒதுக்க வேண்டும். மேலும்,அதிகபட்சம் 7 நீதிபதிகள்தான் அங்கு நியமிக்கப்பட வேண்டும் அல்லது சென்னையிலிருந்து இடமாற்றம்செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.

சென்னை வழக்கறிஞர்களின் முட்டுக்கட்டை காரணமாகவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்பாகஆரம்பத்தில் தாமதம் நிலவி வந்தது. அதையெல்லாம் கடந்து தற்போது கிளை செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில்மீண்டும் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட சென்னை வழக்கறிஞர்கள் முயல்கிறார்களோ என்ற சந்தேகம்பிரபாகரனின் பேச்சு மூலம் ஏற்பட்டுள்ளது.

ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உள்ளிட்ட முழுமையான உயர் நீதிமன்றக் கிளையாக மதுரை கிளைசெயல்பட்டால்தான் தென் மாவட்ட மக்களுக்கு உண்மையான பலன் கிடைக்கும். அதை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் தென் மாவட்ட மக்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+