புதுவை: மெஜாரிட்டியை நிரூபிக்க காங். அரசுக்கு அதிமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுககோரியுள்ளது.

பாண்டிச்சேரி காங்கிரஸ் மூத்த தலைவர் கண்ணன் அக் கட்சியிலிருந்து சில தினங்களுக்கு முன் விலகினார். அதனையடுத்துஅவரது ஆதரவாளர்களான பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலைஆகியோர் நேற்று தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந் நிலையில், சட்டசபையில் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று புதுவை அதிமுக கிளைசெயலாளர் ஏ.அன்பழகன் எம்.எல்,ஏ கோரிக்கை எழுப்பியுள்ளார்.

இன்று நிருபர்களிடம் பேசிய அவர், கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து விலகியதால், அக்கட்சியில்பெரும்பான்மை குறைந்துள்ளது. அரசின் அன்றாடப் பணிகள் பாதிப்படைந்துள்ளன.

எனவே, இவ்விஷயத்தில் துணைநிலை ஆளுநர் என்.என்.ஜா உடனடியாகத் தலையிட்டு, சட்டசபை கூட்டுவதற்கு உத்தரவிடவேண்டும். அப்போது காங்கிரஸ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+