பாண்டிச்சேரி குறித்து பேச்சே கிடையாது: ராமதாஸ் உறுதி
சென்னை:
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி தொடர்பான சர்ச்சைகள் முடிந்து போய் விட்டன. அந்தத் தொகுதியில்பா.ம.க. போட்டியிடுவது உறுதியான ஒன்று என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கியது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.பாண்டிச்சேரி காங்கிரஸார், பா.ம.கவுக்கு முழுமையான ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.இதனால் பீதியடைந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ், நேரடியாக சோனியா காந்திக்குக் கடிதம் எழுதி, ஆதரவுதருமாறும், ஒத்துழைக்குமாறும் கோரியுள்ளார்.
இந் நிலையில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,பாண்டிச்சேரி விவகாரம் முடிந்து விட்டது. அந்தத் தொகுதியில் நாங்கள்தான் போட்டியிடுகிறோம். காங்கிரஸுக்குஅதை கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
பா.ம.க. பொதுக்குழுக் கூட்டத்தில் சோனியா காந்தியைப் பாராட்டியும், போபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜீவ் காந்தவிடுவிக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோனியாவைவெளிநாட்டவர் என்று முதல்வர் ஜெயலலிதா விமர்சித்து வருவதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.