சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டது: கல்லூரி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரயில் தடம் புரண்டது. இதில் கல்லூர் மாணவர் ஒருவர் பலியானார்.
சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து சூளூர்பேட்டை நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பேசின்பிரிட்ஜ் அருகே பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது, திடீரென தடம் புரண்டது.
இதில் திருவொற்றியூர் டி.கே.எஸ். நகரைச் சேர்ந்த தங்கத்துரை என்ற கல்லூரி மாணவர் பரிதாபமாகஉயிரிழந்தார். அவர் லயோலா கல்லூரி மாணவராவார். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பாலத்தின் இரும்புச் சுவர் மீது ரயில் பெட்டி மோதி நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்துஅறிந்ததும், ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். பின்னர் மீட்புப் படையினர் மூலமாக ரயில் பெட்டிகள் பிரித்தெடுக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications