தனித்துப் போட்டி: புதிய நீதிக் கட்சி அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரம்:
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிப்போம் என்று புதிய நீதிக்கட்சியின்தலைவர் ஏ.சி.சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதயமான ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி அதன் பிறகு காணாமல் போய்விட்டது. இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் கட்சி அலுவலக்தை தூசி தட்டி மறுபடியும் பிசியாகஇருக்கிறார்கள் புதிய நீதிக் கட்சியினர்.
ஆனால் எந்த பெரிய அரசியல் கட்சியும் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் குழம்பி வந்த புதிய நீதிக்கட்சி தற்போது அதிரடி முடிவை எடுத்துள்ளது. இது குறித்துகட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது கட்சியினர் 2நகராட்சித் தலைவர்களாக உள்ளனர். பஞ்சாயத்துத் தேர்தலில் பல இடங்களில் நாங்கள் இரண்டாவது இடத்தைப்பிடித்தோம்.
எங்களுக்கு வலுவான ஓட்டு வங்கி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டுஎங்களது ஒட்டு வங்கியின் வலிமையை நிரூபிப்போம். இது தொடர்பாக வரும் 22ம் தேதி வேலூரில்நடைபெறவுள்ள கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications