600 அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் விழுந்து சிறுவன் சாவு

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

rescue team தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற இடத்தில் 600 அடி ஆழ போர்வெல் குழாய் பள்ளத்தில் விழுந்த சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான்.

ஏலகிரியான் கோட்டை என்ற இடத்தில் அஜீத் என்ற சிறுவன், சண்முகம் என்பவருக்குச் சொந்தமானவயல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது வயலில் உள்ள 600 அடி ஆழ போர்வெல் கிணற்றிற்குள் தவறிவிழுந்து விட்டான். சிறுவன் விழுந்த செய்தி அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர்சித்திக், காவல்துறைக் கண்காணிப்பாளர் பெரியய்யா உள்ளிட்ட அதிகாரிகள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.

டியூப் வழியாக அந்தப் பள்ளத்துக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது.

சிறுவன் 600 அடி ஆழ பள்ளத்தில் விழுந்திருந்தாலும், 18 அடி ஆழத்தில் தான் அவன் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்பட்டது.

rescue team இதையடுத்து போர்வெல் பள்ளத்திற்கு அருகில் ஆழமான பள்ளம் தோண்டப்பட்டது.

இரவு முழுவதும் இந்தப் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நள்ளிரவு 2 மணியளவில் சிறுவன்இருந்த இடத்தை தீயணைப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இருப்பினும் அவர்களுக்குஅதிர்ச்சி அளிக்கும் விதமாக சிறுவன் உயிரிழந்திருந்தான்.

சமீபகாலத்தில் தமிழகத்தில், மூடப்படாத போர்வெல் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழந்திருப்பது இது 3வது சம்பவமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+