63 வயதில் குழந்தை பெற்ற ஈரோடு பெண்மணி!!
ஈரோடு:
ஈரோட்டைச் சேர்ந்த 63 வயது பெண்மணிக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் அழகான ஆண் குழந்தைபிறந்துள்ளது. குழந்தையின் தந்தைக்கு 74 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்குத் திருமணமாகி 45ஆண்டுகளாகிறது. இருப்பினும் குழந்தைகள்இல்லை. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதற்காகசிகிச்சை எடுத்தும் பலன் இல்லை.
இந் நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாப்பாத்திக்கு சோதனை நடத்தப்பட்டது. பின்னர்இக்ஸி முறையில் சோதனைக் குழாயில் கரு உருவாக்கப்பட்டு பாப்பாத்தியின் கருப்பையில் செலுத்தப்பட்டது.
இதன் மூலம் தாய்மையடைந்த பாப்பாத்திக்கு நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றுசுப்பிரமணியத்திற்கு 74வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை ஆண்டுகள் கழித்து தனக்கு வாரிசு உருவாகியிருப்பது குறித்து சுப்பிரமணியம் அளவற்ற மகிழ்ச்சிதெரிவித்தார்.
பாப்பாத்திக்காக அவரது உறவினர் ஒரு கரு முட்டையை வழங்கினார். அதில் சுப்பிரமணியத்தின் விந்தணுசேர்க்கப்பட்டு கரு உருவானது. பின்னர் அந்தக் கரு பாப்பாத்தியின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தைஉருவானது.












Click it and Unblock the Notifications