கும்பகோணம் மகாமக விழா துவங்கியது

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

உலகப் பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக விழா கோலாகலமாக தொடங்கியது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் விழாவையொட்டி மகாமகக் குளம் தூர் வாரப்பட்டு,புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இப்போது நீர் நிரப்பப்பட்டு வருகிறது. கணபதி வர பூஜையுடன் மகாமக விழாதொடங்கியது. இந்த பூஜையில் காஞ்சி சங்கராச்சாரியார் கலந்து கொண்டார்.

பூஜைக்குப் பின்னர் கொடியேற்றம் நிகழ்ச்சி காசி விஸ்வநாதர் கோவில், ஆதிகும்பேஸ்வரர் கோவில், நாகஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் ஆகிய புகழ் பெற்ற சிவன் கோவில்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்குகாஞ்சி சங்கராச்சாரியார் புனித நீராடினார். அதனையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

நாளை ஆதி சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதி வராகப் பெருமாள் மற்றும் ராமசாமி கோவில் உள்ளிட்ட 5வைணவக் கோவில்களில் கொடியேற்றப்படும்.

10 நாட்களுக்கு இந்த உற்சவம் நடைபெறும். சைவக் கோவில்களில் மார்ச் 6ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சிநடைபெறும். அன்று ஒருநாள் மட்டும் இந்தக் கோவில்களில் ஏக தின உற்சவம் நடைபெறும்.

அதே நாளில் 12 சிவன் கோவில்களிலிருந்து சுவாமிகள் மகாமக குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும்.மகாமகத்தையொட்டி கும்பகோணம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குகுவிந்த வண்ணம் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+