டாக்டர் பிரகாஷ் புளூபிலிம் வழக்கு: இனி ஆண் நீதிபதி விசாரிப்பார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செக்ஸ் டாக்டர் பிரகாஷ் மீதான வழக்கை பெண் நீதிபதிக்குப் பதில் வேறு ஆண் நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களைக் கேவலமாக சித்தரித்தது, தகவல் தொடர்பு சாதனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியது உள்ளிட்டகுற்றப்பிரிவுகளில் டாக்டர் பிரகாஷ், நிக்சன், சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை 5வது விரைவு நீதிமன்ற நீதிபதி சாவித்திரி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிக்சன் சார்பில், வழக்கை ஆண் நீதிபதிக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார்,

பிரகாஷிடமிருந்து கைப்பற்ற சிடிக்களை பெண் நீதிபதியின் அறையில் பார்ப்பது தர்மசங்கடமாக இருக்கும் என்றுகுற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், இவ்வழக்கு பெண்களை ஆபாசமானநடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது தொடர்பானதாகும்.

எனவே, வழக்கு விசாரணையை 5 வது விரைவு நீதிமன்ற நீதிபதி சாவித்திரியிடம் இருந்து 4 வது விரைவு நீதிமன்றநீதிபதிக்கு மாற்ற வேண்டும். வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+