அதிமுகவுடன் இனி ஒட்டோ, உறவே கிடையாது: ராமதாஸ்
சென்னை:
பா.ஜ.க. மற்றும் அதிமுகவுடன் எதிர்காலத்தில் ஒட்டோ, உறவோ கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணியில் இணையும் பா.ம.க. இன்று தனது நாடாளுமன்றத் தேர்தல்அறிக்கையை வெளியிட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், எதிர்காலத்தில் அதிமுகமற்றும் பா.ஜ.கவுடன் இனி ஒட்டோ, உறவோ வைத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்தார்.
செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், 13 மாதங்களில் வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்த அதிமுக இப்போதுமீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அப்போது 13 மாதங்கள் வாஜ்பாய் அரசை விட்டு வைத்தஜெயலலிதா, இந்த முறை தேவைப்பட்டால், 6 மாதங்களிலேயே கவிழ்க்கத் தயங்க மாட்டார்.
எதிர்காலத்தில் அதிமுகவுடனோ, பா.ஜ.கவுடனோ இனி ஒட்டோ, உறவோ வைத்துக் கொள்ள மாட்டோம்.
புதுவையில் நாங்கள் போட்டியிடுவதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும்பேச்சுக்கே இடமில்லை.
சோனியா காந்திதான் அடுத்த பிரதமர் என்ற கருத்தை நாங்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.அவருக்கே எங்களது முழு ஆதரவும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அதில் சேருவது குறித்து அப்போதுமுடிவெடுக்கப்படும்.
புதுவை உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்ராமதாஸ்.