வைகோவுக்கு வலை வீசும் கூட்டணிக் கட்சிகள்
சென்னை:
தங்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திமுக, பா.ம.க. கட்சிகளின் வேட்பாளர்கள் வைகோவைச்சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திமுகவின் வட சென்னை மாவட்ட வேட்பாளரான செ.குப்புசாமியும், திருச்செங்கோடு தொகுதி வேட்பாளரானசுப்புலட்சுமி ஜெகதீசனும் வைகோவை அவரது வீட்டில் சென்று சந்தித்தனர்.
இருவரும் தங்களுக்காக வைகோ அதிக நேரம் ஒதுக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கோரினர். சுப்புலட்சுமிஜெகதீசனுக்கு வைகோவின் மனைவி ரேணுகாதேவி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அதே போல பா.ம.க. வேட்பாளர்கள் 6 பேரும் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் வைகோவைஅவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அவர்களும் வைகோவை தங்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில்ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய வைகோ, நான் தேர்தலில் நிற்கவில்லை. இதனால் 40 தொகுதிகளிலும்கூட்டணிக் கட்சியினருக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்வேன். கூட்டணிக் கட்சியினர் அனைவரின்வெற்றிக்காகவும் மதிமுக பாடுபடும் என்றார்.
சில நாட்களுக்கு முன் வைகோவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் இரண்டாவதுமுறையாக சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி தரப்படும் என்றுநினைப்பதாகவும், அவ்வாறு தொகுதி ஒதுக்கப்பட்டால் தனக்காக வைகோ அதிக நேரம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டுச் சென்றார்.
ஓராண்டுக்கும் மேலாக பொடாவில் சிறைவாசம் அனுபவித்த வைகோவுக்கு தமிழகம் முழுவதும் அனுதாபம்நிலவுவதாக வரும் தகவல்களையடுத்து அவரை பிரச்சாரத்தில் முழு வீச்சில் பயன்படுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் நினைக்கின்றன.
வைகோ-ஸ்டாலின் சந்திப்பு:
இந் நிலையில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஸ்டாலினும் இன்று வைகோவை சந்தித்துப் பேசினார்.பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சார உத்திகுறித்து ஆலோசித்ததாகவும், வைகோவிடம் வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார்.
சந்திப்பின்போது மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனும், திமுகவின் மத்திய சென்னை தொகுதிவேட்பாளருமான தயாநிதி மாறனும் உடனிருந்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications