இன்று முதல் தமிழ்த் திரை ஒளிபரப்பு தொடக்கம்!
சென்னை:
திரைப்படத் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் திரை தொலைக்காட்சி அலைவரிசை, இன்று முதல்தனது 40 நாள் பரீட்சார்த்த ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
திருட்டு விசிடியை ஒழிக்கும் நோக்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியில் இந்ததமிழ்த் திரை தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவித்த தமிழ்த் திரை ஒரு வழியாக இன்று முதல் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பைத்தொடங்கவுள்ளது. இது தொடர்பாக தமிழ் பொழுதுபோக்கு கலை நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பில், 40 நாள் பரீட்சார்த்த ஒளிபரப்பின்போது அனைத்தும் இலவசமாக ஒளிபரப்பப்படும். அதன்பிறகு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
புதிய திரைப்படங்களை கேபிள் டிவி கட்டமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கவுள்ளோம். தியேட்டர்களுக்குச்சென்று அதிக பணம் செலவழித்துப் படம் பார்க்க விரும்பாதவர்கள், தமிழ்த் திரை தொலைக்காட்சிக்குமாதந்தோறும் குறைந்த அளவில் பணம் கட்டி புதிய படங்களை வீட்டில் இருந்தவாறே பார்க்க வகைசெய்யப்படும்.
இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமளவில் நஷ்டம் ஏற்படுவது குறைந்து, ஓரளவு நஷ்டத்துடன் அவர்கள்தப்ப வழி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.