விந்தியாவை கற்பழிக்க முயன்ற 2 பேருக்கு ஜாமீன் மறுப்பு
ஓசூர்:
நடிகை விந்தியாவை கற்பழிக்க முயன்ற ஓசூர் தொழிலதிபர் கமல்ராஜ் மற்றும் அவரது நண்பர் சம்பத் ஆகியஇருவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஓசூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கன்னி நிலா என்ற படத்தில் நடிப்பதற்காக ஓசூருக்கு சென்றிருந்த நடிகை விந்தியா படப்பிடிப்புக் குழுவினருடன்அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஓசூர் தொழிலதிபர் கமல்ராஜ் மற்றும் சம்பத்உள்ளிட்டோர் அங்கு விந்தியாவை கற்பழிக்க முயன்றனர்.
இது தொடர்பாக ஓசூர் போலீஸில் விந்தியா புகார் கொடுத்தார். அதன் பேரில் கமல்ராஜ், சம்பத் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் தங்களை ஜாமீனில் விடக் கோரி ஓசூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இவர்களது மனுவைப் பரிசீலித்த நீதிபதி பாலகுமாரன், இருவரது ஜாமீன் மனுக்களையும் விசாரிக்கும் அதிகாரம்கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளதாகவும், எனவே அங்கு அணுகுமாறு கூறி மனுவைநிராகரித்தார். மேலும் வழக்கு விசாரணையை கிருஷ்ணகிரி செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.