நாளை மகாமக தீர்த்தவாரி: 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம்:
நாளை மகாமக தீர்த்தவாரியை முன்னிட்டு கும்பகோணத்தில் 20 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக திருவிழா கடந்த மாதம் 26ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (6ம் தேதி) முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மகநட்சத்திர தினமான அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவர்.
நாளை நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம்,திருப்பனந்தாள் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 20,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பகோணம் நகருக்குள் நாளை முதல் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா இன்று இரவு வந்து புனித நீராடிச் செல்லவும் வாய்ப்புள்ளதாகக்கூறப்படுகிறது.