கி.வீரமணியை சந்தித்தார் வைகோ
சென்னை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதற்காக திராவிடர் கழகதலைவர் கி.வீரமணியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நெய்வேலியில் சமீபத்தில் நடந்த தி.க.மாநாட்டின்போது திமுக கூட்டணியை ஆதரித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் தமிழக மக்களுக்கு மாநாட்டில்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந் நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள தி.க. தலைமை அலுவலகத்திற்கு வைகோ சென்று, வீரமணிக்குபொன்னாடை போர்த்தி தி.க. மாநாட்டுத் தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தார்.
பொடா சிறை வாசத்தை மனமுவந்து ஏற்று ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்ததற்காக வைகோவைகி.வீரமணியும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார்.
இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், திமுக கூட்டணிக்கு கி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளதைப்பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications