புதுவை காங்கிரசாருக்கு திமுக கடும் எச்சரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் அது தற்கொலைக்கு சமமாக அமையும் என திமுகஎச்சரித்துள்ளது.
அந்தத் தொகுதியை பா.ம.கவுக்கு விட்டுத் தர மாநில காங்கிரசார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பா.ம.க. தனது வேட்பாளரைக் கூட அறிவித்துவிட்ட நிலையில் காங்கிரசார் கை சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரிபாண்டிச்சேரி முழுவதும் விளம்பரங்களை வரைந்து தள்ளி வருகின்றனர்.
இதற்கு பா.ம.கவும் திமுகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விஷயத்தில் இதுவரை அமைதி காத்து வந்தபாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரான ஜானகிராமன் இப்போது மாநில காங்கிரசாரைக் கண்டித்து அறிக்கைவெளியிட்டுள்ளார்.
கூட்டணியை மதித்து காங்கிரசார் பா.ம.கவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். தனித்துப் போட்டியிடுவது போன்றசெயல்களில் அக் கட்சி ஈடுபட்டால் அது தற்கொலைக்கு சமமாக அமையும். பா.ம.க. வேட்பாளருக்காக திமுகதீவிரமாக உழைக்கும் என ஜானகிராமன் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் புதுவை தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியிடம், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி விரைவில் பேசவுள்ளதாக புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி மீண்டும்கூறியுள்ளார்.
புதுவையை மீண்டும் காங்கிரஸுக்கே பெற்றுத் தர வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம்மிகப் பெரிய கேள்விக்குறியாகி விடும் என்று சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருணாநிதியிடம் பேசி நல்ல முடிவாகக் கூறுவதாக சோனியா காந்தி உறுதியளித்துள்ளார். புதுவைமீண்டும் காங்கிரஸுக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றார்.
இதில் பேசுவதற்கு இனி ஒன்றுமே இல்லை என திமுக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில் புதுவைகாங்கிரசார் தொடர்ந்து தங்களது நிலையில் விடாப்பிடியாகவே உள்ளனர்.