எம்.ஜி.ஆர் நிழலில் இளைப்பாறிய ஜெயலலிதா: வாசன் கடும் தாக்கு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில்பிறந்தவரா, எம்.ஜி.ஆரின் நிழலில் இளைபாறியதைத் தவிர அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தமிழககாங்கிரஸ் தலைவர் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களின் விதிவசத்தாலும், வினைப் பயனாலும் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஜெலலிதா,அதிமுக தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அநாகரீகத்தின் எல்லையைக் கடந்துள்ளார். காங்கிரஸ் தலைவர்சோனியாவை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார்.
மனதில் இருப்பதுதான் வார்த்தைகளாக வெளியே வரும் என்பார்கள். அந்த வகையில் சோனியா காந்தியைவிமர்சித்துள்ளவர்களின் மனதிலும் என்ன உள்ளது என்பது தெரிய வருகிறது. சோனியா பிரதமரானால் நாட்டின்கலாச்சாரம், பண்பாடு பாதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த ஜெயலலிதா கடைபிடித்து வரும் பண்பாட்டையும் அவரது கலாச்சாரத்தையும் ஒருமுறை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திரைப்படத் துறையில் புறக்கணிக்கப்படும் வரை நாட்டைப் பற்றி கவலையே படாமல், மக்களைப் பற்றி எள்அளவும் சிந்திக்காமல் தன் நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரின்நிழலில் இளைப்பாறியதைத் தவிர வேறு என்ன செய்தார் இவர். மக்களுக்காக என்ன தியாகம் செய்தார்?
அதே நேரத்தில் தனது மாமியார், கணவர் என குடும்பத்தையே நாட்டுக்காக இழந்தவர் சோனியா காந்தி. அவரைவிமர்சிக்க ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலாவது தகுதி உள்ளதா?
போகும் இடமெல்லாம் கூட்டம் சேருவதால் சோனியாவைக் கண்டு அச்சப்பட்டுள்ள பா.ஜ.கவினர் அவர்வெளிநாட்டவர் என்ற துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அதற்கு சானை பிடிக்கும் வேலையைஜெயலலிதாவிடம் தந்துள்ளனர்.
இத்தாலியில் பிறந்ததால் இந்தியாவை ஆளும் தகுதி சோனியாவுக்கு இல்லை என்று ஜெயலலிதா கூறுகிறார்.அப்படியானால் தமிழ்நாட்டில் பிறக்காத, தமிழரலே அல்லாத ஜெயலலிலதா தமிழ்நாட்டை ஆளத் தகுதியற்றவர்என்ற முடிவை தமிழக மக்கள் எடுத்தால் என்னவாகும்? ஜெயலலிதா கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்வீசுகிறார்.
இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications