For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: விபச்சாரத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள், தெலுங்கு துணை நடிகை கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக இரண்டு கல்லூரி மாணவிகள், தெலுங்கு துணை நடிகை உள்ளிட்ட 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை எலியட்ஸ் பீச்சில் விபச்சாரம் செய்த மும்பை அழகிகள் உமா, சுவாதி, சசி மற்றும் நுங்கம்பாக்கம்ரீஜென்சி அடுக்கு மாடி குடியிருப்பில் விபச்சாரம் செய்த ஷில்பா ஆகியோர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

இந்தக் கும்பலில் தலைவியான சோனாலட்சுமி (35) என்ற பெண் தப்பி விட்டார்.

College girls arrested in prostitution case

விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபட்ட கல்லூரி மாணவிகள்
இவள் தெலுங்கு துணை நடிகையாவார். சினிமாவில் வாய்ப்பு இல்லையாததால், மும்பை, பெங்களூர் அழகிகளைவிமானத்தில் அழைத்து வந்து சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்த அடுக்குமாடிக்குடியிருப்பை மாதம் ரூ.30,000க்கு வாடக்ைகு எடுத்து, விபச்சாரம் செய்து வந்துள்ளார்.

பெண்களை விபச்சாரத்துக்குத் தருவதோடு ஆபாச சிடிக்களை வாடிக்கையாளர்களுக்குப் போட்டுக் காட்டி குஷிகூட்டுவது இவரது வாடிக்கை. அனுப்பவாராம். ஒரு இரவுக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வசூலித்துவந்துள்ளார். போலீஸார் ரெய்டு நடத்தியபோது, கலர் டிவி மற்றும் ஆபாச சிடிக்களையும் பறிமுதல் செய்தனர்.

தப்பிவிட்ட சோனாலட்சுமியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் பட்டினப்பாக்கத்தில் ஒரு காரில் அழகிகளுடன் சோனாலட்சுமி ஒரு தொழிலதிபருக்காகக்காத்திருப்பதாக செய்தி வந்ததையடுத்து போலீஸார் வாகனச் சோதனை செய்து, சோனாலட்சுமியை மடக்கிப்பிடித்தனர். அப்போது சோனா காரை ஏற்றி ஒரு போலீஸ்காரரைக் கொல்ல முயன்றார். இதில் போலீஸ்காரர்காயமடைந்தார்.

மேலும் அவருடன் காரில் இருந்த அபிஜித், ராகேஷ் என்ற இரு புரோக்கர்களும், அஞ்சலி, பபிதா என்ற இருஅழகிகளும் போலீஸார் மீது பீர் பாட்டிலை வீசி தாக்குதல் நடத்தினர். கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுஅவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உபயோகித்த போர்டு ஐகான் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. சோனாலட்சுமி ஏற்கனவே ஒரு முறைபோலீஸாரிடம் சிக்கி சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் 10வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கைதானவர்ளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை நடத்தநீதிபதியிடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி அனுமதியளித்தார்.

இதனையடுத்து கைதானவர்களுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் எய்ட்ஸ் பரிசோதனைநடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நுங்கம்பாக்கம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போலீஸார் சோதனை நடத்தியபோது, அனிதா,ப்ரீத்தி, பிரியா என்பவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பிடிபட்டவர்களில் இருவர்கல்லூரி மாணவிகள் என்பது தெரியவந்தது. பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்து ரகசியமாக விபச்சாரத்தில்ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களுடன் உல்லாசமாக இருந்த அரசு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர் மனைவியுடன்சண்டை போட்டு உல்லாசமாக இருக்க இங்கு வந்துள்ளார். கைதானவர்களில் அனிதா ஆந்திராவைச் சேர்ந்தபுரோக்கராவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X