ஜெ., வாஜ்பாய் கூட்டு பிரச்சாரம் எப்போது?
கோவை:
மதுரை, திருச்சி அல்லது சிதம்பரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தொகுதியில் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முதல்வர்ஜெயலலிதா ஆகியோர் கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாயும், முதல்வர் ஜெயலலிதாவும் ஒரேமேடையில் கூட்டுப் பிரச்சாரம் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
அனேகமாக மதுரை, திருச்சி அல்லது சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் இந்த கூட்டுப் பிரச்சாரம் நடக்கும்.வேட்பாளர் பட்டியல் 15ம் தேதிக்கு முன்பாகவே வெளியிடப்பட்டு விடும் என்றார் அவர்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் சிதம்பரம் தொகுதியில்,முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் கிருபாநிதி போட்டியடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அங்குவாஜ்பாய், ஜெயலலிதா கூட்டுப் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள பா.ஜ.க. முயற்சிப்பதாக தெரிகிறது. மற்ற இரண்டுதொகுதிகளிலும் (மதுரை, திருச்சி) அதிமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications