ஜாமீன் தர ஆளில்லை: சிறைவாசத்தை தொடரும் ஜனனியின் கார் டிரைவர்
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஜனனியின் கார் டிரைவர் சதீஷுக்கு ஜாமீன் கொடுக்க யாரும் முன் வராததால்,மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டும் சிறையிலிருந்து வெளியேவர முடியாமல் அவர் தவித்து வருகிறார்.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கஞ்சா கடத்தியதாகக் கூறி மதுரை கருப்பாயூரணிபோலீஸார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மூன்று பேரையும் கைது செய்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜனனியும், அவரது தாயாரும் சமீபத்தில் திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர். அவர்களது கார் டிரைவர் சதீஷுக்கு கடந்த 4ம் தேதி மதுரை போதைப்பொருள் தடுப்புநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இரு நபர் ஜாமீனில் சதீஷை விடுதலை செய்ய நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார். மேலும்தினசரி கருப்பாயூரணிகாவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி தனது ஜாமீன் உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சதீஷுக்கு ஜாமீன் தர யாரும் முன் வராத காரணத்தால் அவர் சிறையிலிருந்து விடுதலை ஆவதில்தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம்உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications