திமுக வேட்பாளர் ராதிகாவுக்கு குழந்தை பிறந்தது
சென்னை:
போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான ராதிகா செல்விக்கு இன்று ஆண் குழந்தை பிறந்தது.
நேற்றிரவு புரசைவாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான ராதிகா செல்வி கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பின் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை 10.20 மணிக்கு ஆப்பரேஷன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மார்ச் 15ம் தேதி குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தேதி குறித்திருந்தனர். ஆனால் 5 நாட்கள் முன்கூட்டியே குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ராதிகாவின் குடும்பத்தினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.