சிங்கப்பூர்: தமிழ் இளைஞரை கடத்திய 5 தமிழர்களுக்கு சிறை
சென்னை:
சிங்கப்பூர் இளைஞரக் கடத்தி, அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய 5 தமிழர்களை சிங்கப்பூர் போலீஸார்கைது செய்துள்ளனர்.
செல்வராஜ் சண்முகம் என்பவர் அழகன் நாச்சியப்பன் என்பவரிடம் 16,000 சிங்கப்பூர் டாலர்கள் கடன்வாங்கியுள்ளார். அந்தக் கடனை சண்முகம் திருப்பித் தராததால், அவரது மகன் விக்னேஷ்வரனை (18)நாச்சியப்பன் தனது நண்பர்களுடன் கடந்த ஜூலை மாதம் கடத்தியுள்ளார்.
பணம் கொடுத்தால் விக்னேஷ்வரனை விடுவிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சண்முகம் பணத்தைக் கொடுத்துதனது மகனை மீட்டார். அதன் பின்னர் போலீஸாரிடம் புகார் தந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அழகன்நாச்சியப்பன் உட்பட, கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் அழகன் நாச்சியப்பனுக்கு 9 மாத சிறைத் தண்டனையும், கணேசன்நாச்சியப்பன் என்பவருக்கு 8 மாத சிறைத் தண்டனையும், மற்ற 3 பேருக்கும் 7 மாத சிறைத்தண்டனையும் விதித்துதீர்ப்பளித்தது.
இதனையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.