திருமாவளவன் மாநாட்டுக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்
சென்னை:
சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த விட்டது.
சேலம் நகரில் மார்ச் 14ம் தேதி இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தவுள்ளது.இந்த மாநாடு நடந்தால், இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படும், கிறிஸ்தவரான திருமாவளவன் இதைநடத்தத் தகுதியற்றவர், எனவே மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்நாகராஜா என்பவர் மனு செய்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பொதுநலன் வழக்கு என்ற பெயரில் அரசியல் தொடர்பான விவகாரங்களை நீதிமன்றங்களுக்குக் கொண்டு வருவதுகண்டனத்துக்குரியது.
அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நமது நீதிமன்ற அமைப்பில் வழியில்லை. எனவே இந்த மனுவைத்தகுதியற்றதாகக் கருதி நிராகரிக்கிறோம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications