ஜெ. பிரச்சாரம்: பஸ்கள், லாரி மூலம் கூட்டம் சேர்க்கும் அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை & வேலூர்:

முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களில் அதிக அளவில் மக்களைத் திரட்டும் பணியில் அந்தந்த தொகுதிகளின் பொறுப்பு அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலையிலும் வேலூரிலும் ஜெயலலிதா சென்ற பாதையில் கூட்டம் காட்டுவதற்காக ஏராளமானோர் பல பகுதிகளில் இருந்தும் கார், வேன்கள், பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். தலைக்கு ரூ. 100ம் தரப்பட்டது.

குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கொண்டு வரப்பட்டு கூட்டம் சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் இவ்வளவு என அமைச்சர்கள் மூலம் பணம் தரப்பட்டு அந்தப் பணம் கிளைச் செயலாளர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர்.

வேலூரில் ஜெயலலிதா பேசிய கோட்டை மைதானத்தின் வெளியே நூற்றுக்கணக்கான பஸ்கள், லாரிகள் நின்றிருந்தன. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆட்கள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

நேற்று முன் தினம் பிரச்சாரத்தில் கூட்டம் இல்லாததால் ஒரு அமைச்சருக்கு டோஸ் கிடைத்ததும், அதைத் தொடர்ந்து எல்லா அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தை காலி செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு விரைந்துள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+