மயிலை மக்களை மயக்கிய மதிமுக பொது கூட்டம்
சென்னை:
சென்னையில் நடந்த மதிமுக தேர்தல் பொதுக் கூட்டம் வைகோவின் கட் அவுட்கள், போஸ்டர்கள் எதுவுமே இல்லாமல் மிகஎளிமையாக நடந்தது. இது அப் பகுதியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மயிலை மாங்கொல்லையில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் பொதுக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில்வைகோவிடம் தென் சென்னை மாவட்டம் சார்பில் ரூ. 4.5 லட்சம் தேர்தல் நிதி அளிக்கப்பட்டது.
இக் கூட்டத்தைக் காண வந்தவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. கட்சியின் பொதுச் செயலாளரும், திமுக கூட்டணியின்நட்சத்திரப் பிரசாரகருமான வைகோவின் ஒரு கட் அவுட் இல்லை, அவரைத் துதி பாடும் பெரிய போஸ்டர்கள் இல்லை.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகிய இருவருக்கு மட்டும் விளக்குகளால் அமைக்கப்பட்ட கட் அவுட்கள்வைக்கப்பட்டிருந்தன. மற்றபடி அது அரசியல் கட்சியின் பொதுக் கூட்டம் போலவே இல்லை.
ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து ஆடம்பரத் தோரணங்கள், பிரமாண்ட கட் அவுட்கள் என கலக்கும் அரசியல்கட்சிகளுக்கு மத்தியில் மதிமுவினரின் எளிமை மயிலை மக்களை மயக்கியது.












Click it and Unblock the Notifications