பாமக கொடிகளை அகற்றிய போலீஸ்
தர்மபுரி:
அத்வானியின் ரத யாத்திரையை ஒட்டி தர்மபுரியில் பாமகவினர் கட்டியிருந்த கட்சிக் கொடிகளை போலீஸார் அகற்றினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி, துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரைவருகையையொட்டி தர்மபுரியில் கட்டப்பட்டிருந்த பாமக கொடிகளை காவல்துறையினர் சட்டவிரோதமாக அகற்றியுள்ளனர்.இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம்.
பு.தா.இளங்கோவன் கட்சியின் தீவிர உறுப்பினராக இல்லாவிட்டாலும் கூட இன்னும் அவர் பாமகவில்தான் உள்ளார். அவர்கட்சியை விட்டு விலகவில்லை என்றார் அன்புமணி.
பாமக வேட்பாளர் டாக்டர் ஆர்.செந்திலை ஆதரித்துப் பின்னர் அன்புமணி தர்மபுரியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்கிடையே முன்னாள் தர்மபுரி எம்.பியான பு.த.இளங்கோவன் பா.ஜ.கவுடன் நெருங்கி வருகிறார். தனக்கு தர்மபுரியில்போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் பா.ஜ.கவில் இணைவதாகவும் பேரம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications