அதிமுகவின் வெற்றிக்காக மேலும் ஒருவர் விரல்களை துண்டித்தார்
திருநெல்வேலி:
அதிமுகவின் தேர்தல் வெற்றிக்காக மேலும் ஒருவர் தனது விரல்களைத் துண்டித்துக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ரத்னம் என்பவர் தனது கையின் 3 விரல்களை அதிமுக வெற்றிக்காககோவிலில் வைத்துத் துண்டித்துக் கொண்டார். இந்த சம்பவத்தின் பரபரப்பு மறைவதற்குள் திருநெல்வேலியில் ஒருஅதிமுக தொண்டர் தனது இரண்டு விரல்களைத் துண்டித்துக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். சமையல்காரராகவேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை பிற்பகல் இசக்கியம்மன் கோவிலுக்கு சென்ற கணேசன், அங்குஅரிவாளால் தனது 2 கை விரல்களைத் துண்டித்துள்ளார்.
விரல்களை வெட்டுவதற்கு முன்பு அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தில், அதிமுக மற்றும் திருச்செந்தூர் அதிமுகவேட்பாளர் தாமோதரன் வெற்றிக்காக இந்த தியாகத்தை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணேசன் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கணேசனைப் பார்த்து நலம் விசாரித்தனர்.