கள்ளக் காதலுக்கு இடைஞ்சல்: கணவனை வெட்டிக் கொன்ற மனைவி
அரியலூர்:
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
அரியலூக் அருகே பெரியநாகலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விசுவநாதன் (40). இவரது மனைவி சரோஜா(34). திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
இந் நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (35) என்பவருக்கும் கள்ளக் காதல்ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த விவரம் தெரியவந்தவுடன் மனைவியை விசுவநாதன் தண்டித்தார். இதையடுத்துஇருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து பெரியசாமியிடம் சரோஜா தெரிவிக்க, விசுவநாதனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.
இந் நிலையில் நேற்று வாழைத் தோப்பில் தூங்கிக் கொண்டிருந்த விசுவநாதனை சரோஜா அரிவாளால் கழுத்தில்வெட்டினார். கழுத்தில் ஆழமான வெட்டு விழுந்தாலும் சுதாரித்து எழுந்த விசுவநாதன் அங்கிருந்து ஓட முயன்றுமுடியாமல் கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை முதுகிலும் தலையிலும் முகத்திலுமாக சரோஜா தொடர்ந்து சரமாரியாக வெட்டிக்கொன்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து சரோஜாவும் பெரியசாமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications