வாஜ்பாய்க்காக ஆடு பலி கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி நீக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக கோவிலில் ஆடுவெட்டிப் பலி கொடுத்து பூஜை செய்த பா.ஜ.க. நிர்வாகி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் கோட்டக்குடியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மாநில பா.ஜ.க. விவசாய அணி செயலாளராகஇருந்து வந்தார்.வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வேண்டும், பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெற வேண்டும்என்பதற்காக இவர் மதுரை பாண்டி கோவிலில் ஆடு வெட்டி சாமி கும்பிட நேர்ந்திருந்தார்.

இதையடுத்து மேலூரிலிருந்து பா.ஜ.க. தொண்டர்களுடன் சைக்கிள் பேரணியாக கிளம்பினார். அவரது சைக்கிள்ஊர்வலத்தை அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.சாமி தொடங்கி வைத்தார். பின்னர் தொண்டர்கள் புடை சூழ பாண்டிகோவிலுக்கு வந்தடைந்தார். அங்கு ஆடு வெட்டி பூஜையும் நடத்தப்பட்டது.

இந் நிலையில், சரவணனின் செயல் கட்சிக்கு அவப் பெயரை உண்டாக்கி விட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்துபா.ஜ.க. மேலிடம் நீக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+