ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: இருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை மீனவர்கள் நடத்திய குண்டு வீச்சில்2 ராமேஸ்வரம் மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களான முருகன், முனியன், சாமி, ராஜாமற்றும் கணேசன் ஆகியோர் புதன்கிழமை மாலை மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.

சர்வதேச எல்லைக்கு அருகே இந்தியப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைமீனவர்கள் அங்கு வந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர்.

அவர்கள் வீசிய குண்டுகளில் 2 கடலுக்குள் விழுந்து விட்டது. ஒரு குண்டு தமிழக மீனவர்களின் படகில் விழுந்துவெடித்தது. இதில் கணேசன் படுகாயம் அடைந்தார். ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள்காயமின்றித் தப்பினர்.

குண்டை வீசிய இலங்கை மீனவர்கள் பின்னர் அங்கிருந்து தப்பி விட்டனர். கணேசன் ராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+